ஒரு இரயில் பயணம்..
கதிரவன் தலை தூக்கி பார்க்கும் அதிகாலை!
பசுமையான வயல் நடுவில்!
மழை சாரல் ஜன்னல் கம்பிகளை முத்தமிட!
அன்னையை போல் காற்று அணைக்க
பாதி தூக்கத்தில் ஒரு பெண்!
கவிதை போல் இனிமையான புன்னகையுடன் ஒரு குழந்தை என் எதிரே விளையாட!
என் இரயில் நிலையம் வந்தும்
இறங்க மனம் இல்லாமல்!
ஜன்னல் ஓரம் ஒரு இருகையில் நான்!
No comments:
Post a Comment